தமிழக செய்திகள்

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

ஆதம்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகர் 6-வது குறுக்கு தெருவில் புதியதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திருவண்ணாமலை அடுத்த பொன்னாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவர் அங்கேயே தங்கி சென்டரிங் வேலை பார்த்து வந்தார்.

முருகன் நேற்று முன்தினம் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் தள்ளாடியபடி வந்த முருகன், திடீரென 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த முருகன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து