தமிழக செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தேவதானப்பட்டி அருக மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்

தினத்தந்தி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 51). கூலித்தொழிலாளி. இன்று இவர், அந்த பகுதியில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகே நின்ற மரத்தை அவர் தொட்டார். அதில் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மரத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?