தமிழக செய்திகள்

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு முக்கடல் காஞ்சிராங்குளத்தை சேர்ந்தவர் ரசாலம் (வயது35), கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குளம் உள்ளது. நேற்று மதியம் ரசாலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தடுமாறி குளத்தில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்