தமிழக செய்திகள்

காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பலி

காசிமேட்டில் ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சென்னை புதுவண்ணாரப்பேட்டை தேசிங்கு நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர், நேற்று முன்தினம் இரவு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரைக்கு சென்றார். அப்போது கல்லில் கால் வழுக்கியதால் கடலில் தவறி விழுந்து விட்டார். இதில் ராட்சத அலையில் சிக்கிய முருகானந்தம், கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை அவரது உடல் கடலில் மிதப்பதை கண்ட பொதுமக்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து