தமிழக செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்துகட்டிட தொழிலாளி பலி

எருமப்பட்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தா.

தினத்தந்தி

எருமப்பட்டி

கட்டிட தொழிலாளி

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஊரகரை மலையப்பர் காலனியை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், இரண்டு வயதில் தியாகு என்ற மகனும் உள்ளனர்.

முரளி நேற்றுமுன்தினம் எருமப்பட்டி அடுத்த அலங்காநத்தம் பிரிவு ரோடு அருகே அருணாசலம் என்பவருடைய வடக்கு தோட்டத்தில் அவர் கட்டி வரும் வீட்டின் முதல் மாடியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடன் அவரது தம்பிகுமார் மற்றும் சந்திரசேகர் ஆகியோரும் வேலை செய்து வந்தனர்.

பலி

இந்தநிலையில் முரளி எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் முரளியை மீட்டு சிகிச்சைக்காக அலங்காநத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முரளி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து