தமிழக செய்திகள்

தொழிலாளி தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

ஆயக்குடி அருகே உள்ள பச்சளநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது 25). வெல்டிங் தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் துரைச்சாமியை, அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த துரைச்சாமி, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து