தமிழக செய்திகள்

தொழிலாளி தற்கொலை

ஊத்தங்கரை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி ஊராட்சி ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.