தமிழக செய்திகள்

தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினத்தந்தி

தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஓவியம், இசை, தையல், எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு நடத்தப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர். அதன் பின்னர் நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்காலிக ஆசியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவாகள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை