தமிழக செய்திகள்

உலக தாய்மொழி தின விழா

காட்பாடியில் உலக தாய்மொழி தின விழா நடந்தது.

காட்பாடி காந்திநகரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் உலக தாய்மொழி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வர் மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார்.

இதில் உதவி பேராசிரியர் ராஜாகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கவுரவ விரிவுரையாளர் அனிதா நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT