தமிழக செய்திகள்

உலக சுற்றுலா தின போட்டிகள்

தோரணமலை முருகன் கோவிலில் உலக சுற்றுலா தின போட்டிகள் நடந்தது.

தினத்தந்தி

பாவூர்சத்திரம்:

உலக சுற்றுலா தினத்தையொட்டி தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தோரணமலை நிர்வாகம் இணைந்து நடத்திய இப்போட்டிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கட்டுரை எழுதுதல், படம் வரைதல் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அதிகாரி சீத்தாராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு