தமிழக செய்திகள்

யாக்ஞவல்க்ய குரு ஜெயந்தி நிகழ்ச்சி

யாக்ஞவல்க்ய குரு ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாடகள் 68-ம் வருட ஸ்ரீ யாக்ஞவல்க்ய குரு ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூன்று நாட்களும் பிரம்மஸ்ரீ ரகுராம சாஸ்திரிகள் தலைமையில் சதுர் வேதம் பாராயணம் நடைபெற்றது, சதுர் வேதம் என்றால் நான்கு வேதங்கள் ரிக், யஜூர் சுக்குல யஜுர், கிருஷ்ண யஜுர், சாம அதர்வன வேதங்கள். இதில் மொத்தம் 30 வேத விற்பனர்கள் வேத பாராயணம் செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். முதல் நாள் மகா கணபதி ஹோமமும், இரண்டாம் நாள் சபரி வார வீர சரபேஸ்வரர் ஹோமமும் நடைபெற்றது. இதில் 2 நாட்களும் மாலை உபன்யாசங்கள் நடைபெற்றது. முதல் நாள் திருவாசகம், தேவாரமும், 2-ம் நாள் சத்யபாமா கல்யாணம் மற்றும் ஜாம்பவி கல்யாணம் உபன்யாசம் நடைபெற்றது. 3-ம் நாளான நேற்று காலை சதுர்வேத பாராயணம், ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து வேத விற்பன்னர்களுக்கு சம்பாவனை அளித்து கவுரவித்த நிகழ்ச்சியும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு