தமிழக செய்திகள்

கிளிக்குடி அரசு பள்ளியில் யோகா பயிற்சி

கிளிக்குடி அரசு பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

தினத்தந்தி

அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் கட்டாயம் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் யோகா கற்றுக்கொள்வது அவசியம். யோகா கற்றுக்கொள்வதின் மூலம் மாணவர்களின் மனதும், உடலும் மேம்படும். மாணவர்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியோடு வாழ, தினமும் காலை நேரத்தில் யோகா பயிற்சி செய்வது அவசியம். பள்ளி மாணவர்கள் யோகா கற்றுக்கொள்வதால் மன அமைதி கிடைப்பதோடு, உடலுக்கும், புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார். பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்