தமிழக செய்திகள்

மொளசி அருகேஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

மொளசி அருகே கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய வீட்டிற்கு திருப்பத்தூரை சேர்ந்த உறவினரான விமல் (வயது 19) என்பவர் வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். திடீரென்று அவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து வெப்படை தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் விமலை தேடும் பணியை தொடங்கினர். இந்த நிலையில் நேற்று காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய விமல் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து