தமிழக செய்திகள்

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

மாணவியை வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வாலிபர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 19) என்பவர் மாணவியை வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்