தமிழக செய்திகள்

சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது

சென்னை வடபழனியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை,

சென்னை வடபழனி அருகே சாலையோரம் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

வாலிபர் கைது:

இது தொடர்பாக அந்த பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வடபழனியைச் சேர்ந்த பிரித்விராஜன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.