தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி

வால்பாறை

வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட்டை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த 4-ந் தேதி வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு துணிக்கடைக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து வால்பாறை போலீசில் விக்னேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வால்பாறை-சோலையாறு அணை சாலையில் ஸ்டேன்மோர் கரும்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சோலையாறு எஸ்டேட் 3-வது பிரிவு பகுதியை சேர்ந்த முனுசாமி(26) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஓட்டி வந்தது விக்னேஷிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. உடனே மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், முனுசாமியை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு