தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நெல்லை சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச்சேர்ந்த பிரிஜீத் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் தலைமையிலான போலீசார் நேற்று மார்த்தாண்டம் சென்று பிரிஜீத்தை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்