தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த 4-ந் தேதி திருட்டு போனது. இதுகுறித்து யுவராஜ் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை போலீசார் ராணிப்பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஊனை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த வினோத் (20) என்பவரை பிடித்து விசாரித்தபோது, யுவராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்