தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நாகர்கோவில், மார்ச்.14-

நாகர்கோவிலில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில் மேலக்கலங்கடி பகுதியை சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன் (வயது 32). இவர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது.

தொடர்ந்து போலீசாரின் எச்சரிக்கை மீறி அவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் நேற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை