திருநெல்வேலி,
நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி, தச்சநல்லூர், வடக்கு சிதம்பரநகரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பேச்சிராஜா (வயது 26) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
இதனையடுத்து அந்த வாலிபர், தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.