தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மணல்மேடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

மணல்மேடு:

மணல்மேடு அருகே கிடாதலைமேடு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் தினேஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி 1 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தினேசின் மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மதியம் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்ட தினேஷ் நீண்ட நேரம் ஆகியும் திறக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தினேஷ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்