தமிழக செய்திகள்

ஆர்.கே.பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆர்.கே.பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 23). இவர் தனது பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு அவர்களிடம் இருந்து கோபித்துக் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆர்.பி.கண்டிகையில் உள்ள தனது பாட்டி தெய்வானை வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் வீட்டில் தங்கினார்.

நள்ளிரவில் பாட்டி வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தமிழ்ச்செல்வன் கயிற்றால் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து