சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 71,510 ஆக உள்ளது. சென்னையில் 22,374 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,569 பேர்
அண்ணா நகர் - 2,432 பேர்
தேனாம்பேட்டை-2,163 பேர்
ராயபுரம் மண்டலத்தில் - 1,964 பேர்
தண்டையார்பேட்டை-1,690 பேர்
திரு.வி.க. நகர்- 1,898 பேர்
அம்பத்தூரில் 1,221 பேர்
வளசரவாக்கத்தில் 1,148 பேர்
அடையாறு 1479 பேர்
திருவொற்றியூரில்-999 பேர்
ஆலந்தூர் - 951 பேர்
பெருங்குடி - 882 பேர்
மாதவரம்-829 பேர்
சோழிங்கநல்லூர்-522 பேர்
மணலியில் 496 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.