செய்திகள்

பாகிஸ்தானில் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர் பலி

பாகிஸ்தானில் சோதனை சாவடி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் வடக்கே வசீரிஸ்தான் பகுதியில், காரியோம் என்ற இடத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படையினரை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். எனினும், இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை, ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லை பகுதியில் வடக்கு வசீரிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது