செய்திகள்

போலீஸ்காரர் மனைவி திடீர் சாவு ஆர்.டி.ஓ. விசாரணை

ஆவடியில் போலீஸ்காரரின் மனைவி திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

ஆவடி,

ஆவடி ஐ.ஏ.எப். முதல் குறுக்கு தெரு, அங்கப்பன் தெருவை சேர்ந்தவர் குளஞ்சிநாதன் (வயது 33). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், குழந்தைகள் இல்லை.

கீர்த்தனா அல்சர் பிரச்சினைக்காக பல நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வாந்தி எடுத்தார். பின்னர் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்தனர்.

ஆனால் நேற்று காலை மீண்டும் தொடர்ச்சியாக அவருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். குளஞ்சிநாதன் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த கீர்த்தனாவின் தாய் மற்றும் சகோதரர் அவரை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கீர்த்தனா பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கீர்த்தனாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்