செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் ஆகிய அணிகளை வரிசையாக புரட்டியெடுத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 புள்ளிகளுடன் தற்போது 3வது இடத்தில் உள்ளது.

காஞ்சி வீரன்ஸ் அணியும் கில்லீஸ் போன்று முதல் ஆட்டத்தில் தோற்று அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வெற்றியோடு எழுச்சி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

மொத்தத்தில் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் காஞ்சி வீரன்ஸ் அணியும் வலுவுடன் இருப்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு