மதியம் 2.55 மணி நிலவரம்.. திமுக வேட்பாளர் 7734 வாக்குகள் முன்னிலை
கதிர் ஆனந்த் (திமுக+) - 4,83,099 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அதிமுக+) - 4,75,365 வாக்குகள்
நாம் தமிழர் - 26,797 வாக்குகள்
மதியம் 2: 45 மணி நிலவரம்.. திமுக வேட்பாளர் 8,286 வாக்குகள் முன்னிலை
கதிர் ஆனந்த் (திமுக+) - 4,79,011 வாக்குகள்
ஏ.சி.சண்முகம் (அதிமுக+) - 4,70,725 வாக்குகள்
நாம் தமிழர் - 26,505 வாக்குகள்
மதியம் 2.10 மணி நிலவரப்படி : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8460 வாக்குகள் முன்னிலை
கதிர் ஆனந்த் - திமுக - 4,78,855
ஏ.சி.சண்முகம் - அதிமுக - 4,70,395
தீபலட்சுமி - நாம் தமிழர் கட்சி - 26,502
மதியம் 2.00 மணி நிலவரப்படி : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 9188 வாக்குகள் முன்னிலை
கதிர் ஆனந்த் - திமுக - 4,76,194
ஏ.சி.சண்முகம் - அதிமுக - 4,67,006
தீபலட்சுமி - நாம் தமிழர் கட்சி - 26,320
மதியம் 1: 50 மணி நிலவரம்: திமுக 11,644 வாக்குகள் முன்னிலை
கதிர் ஆனந்த் - திமுக - 4,68,870
ஏ.சி.சண்முகம் - அதிமுக - 4,57,226
தீபலட்சுமி - நாம்தமிழர் கட்சி - 25 953
நோட்டா - 8,805
வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். முதல் சுற்று நிலவரத்தில், அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்று இருந்தார்.
தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மதியம் 1.25 நிலவரப்படி கதிர் ஆனந்த் 3,91,579 வாக்குகளும் ஏசி சண்முகம்- 3,80,032 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி தீப லட்சுமி 21,419 வாக்குகளும் பெற்று இருந்தனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 11,547 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.