வானிலை செய்திகள்

5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை,

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைய ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், 5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.