சென்னை,
தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி கடைசியில் இருந்தே உக்கிரம் காட்ட தொடங்கிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பனிகாலத்தினால் ஏற்பட்ட குளிர் வாட்டி வதைத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது கோடை காலம் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது." எல்நினோ” தாக்கத்தால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக வெயில் உக்கிரம் காட்டும் இடமான வேலூரில்தான் இந்த ஆண்டு 100 டிகிரியை வெயில் முதலில் தொட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது உள் மாவட்டங்களிலும் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:-
வேலூர் - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)
ஈரோடு - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)
கரூர் பரமத்தி - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருச்சிராப்பள்ளி - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
திருப்பத்தூர் - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
மதுரை நகரம் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)