சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
ஈரோடு – 100.04 டிகிரி பாரன்ஹீட்
மதுரை விமான நிலையம் – 100.4 டிகிரி பாரன்ஹீட்
நாகப்பட்டினம் – 100.2 டிகிரி பாரன்ஹீட்
தஞ்சாவூர் – 100.4 டிகிரி பாரன்ஹீட்
திருச்சி – 101.3 டிகிரி பாரன்ஹீட்