செய்திகள்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறை உறுப்பினர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறையில் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் பெது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த, உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழல் பிரச்சினை என்பது தற்பொழுது சர்வதேச அளவிலும் கவனத்தை பெற்றுள்ளதாக கூறியுள்ளது. இது பேன்ற சூழலில், குறித்த நேரத்தில் நியமன அறிவிக்கையை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறையில் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை