செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பூங்கொத்துடன் மனு கொடுக்க வந்த பந்தல் அமைப்பாளர்கள்

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பந்தல் அமைப்பாளர்கள் பூங்கொத்துடன் வந்து மனு கொடுத்தனர்.

தினத்தந்தி

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பந்தல், மைக்செட் அமைப்பாளர்கள் மற்றும் அலங்கரிப்பாளர்கள் நேற்று கைகளில் பூங்கொத்துகளுடன் திரண்டு வந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கொரோனா ஊரடங்கால் திருமண மண்டபங்களில் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பந்தல், மைக்செட், மேடை அலங்காரங்கள் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே மனு அளித்திருந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தெரிவித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவை கைவிட்டு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். அதில், பந்தல், மைக்செட் அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், திருமண மண்டபங்களில் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு