உலக செய்திகள்

ஈராக்: மோசுல் பகுதியில் ஒரு லட்சம் குழந்தைகள் ஆபத்தில் சிக்கியுள்ளனர் - ஐநா

சுமார் 1,00,000 குழந்தைகள் ஐ எஸ் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் ஆபத்தானது என்று ஐநா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பாக்தாத்

ஐ நாவின் சிறார்களுக்கான அமைப்பான யூனிசெப் மோசுல் நகரில் குழந்தைகள் தீவிரவாதிகளால் மனிதக் கேடயமாக பயன்படுத்தக்கூடிய சாத்தியமிருப்பதாக கூறியுள்ளது. பலர் கடும் சண்டைக்கு இடையில் சிக்கவும், சில நேரங்களில் போரிடவும் கூட நேரிடலாம என்றும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. போரில் மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்படுவதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது.

கடந்த அக்டோபரில் மோசுல் நகரின் மேற்குப் பகுதியில் தாக்குதலை துவங்கியது. அமெரிக்காவின் தொடர்ச்சியாக விமான மற்றும் தரைப்பட தாக்குதல் ஈராக்கிய படைகளுக்கு உதவின. போருக்கு முன்னதான மக்கள்தொகையான 7,00,000 பேரில் மூன்றில் ஒரு பகுதியினர் நகரை விட்டு வெளியேறி நண்பர்களுடனும், உறவினர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். பலர் அகதிகளாக மாறியுள்ளனர்.

போர் நடக்கும் பகுதியில் ஏராளமானோர் இறந்து கிடப்பதாகவும், அதில் குழந்தைகளும் அடங்குவர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு