உலக செய்திகள்

கொலம்பியாவில் விமான விபத்து - 14 பேர் பலி

கொலம்பியாவில் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். #PlaneCrash #Colombia

தினத்தந்தி

போகோடா,

கொலம்பியாவின் அமேசான் பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு டிசி-3 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 9 பயணிகளும், 2 விமானிகளும், விமான ஊழியர் 3 பேரும் இருந்தனர்.

மேடா மாகாணத்தில் உள்ள லா பெண்டிரிசோன் நகருக்கு அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்