உலக செய்திகள்

தேர்வில் மதிப்பெண் குறைவு: தட்டிக் கேட்ட தாய், தந்தை, தம்பியை சுட்டுக் கொன்ற சிறுவன்..!

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தட்டிக் கேட்ட தாய், தந்தை, தம்பியை சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான்.

தினத்தந்தி

மாட்ரிட்,

ஸ்பெயினில் பெற்றோரையும் 10 வயது சகோதரனையும் 15 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு துறைமுக நகரமான அலிகாண்டேவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக்கு பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இறந்த பெண்ணின் சகோதரி அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது சகோதரி, கணவர் மற்றும் 10 வயது குழந்தை என அனைவரும் இறந்து கிடந்துள்ளனர். அவர்களது 15 வயது மகன் மட்டும் உயிருடன் இருந்துள்ளான். அந்த சிறுவன் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரனைக் கொன்றதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளான். இதையடுத்து அந்த பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 நாட்களாக சடலங்களுடன் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் சிறுவன், பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் அதனால் அவனது தாயுடன் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளான்.

அதன் பிறகு அவனுடைய தந்தையின் வேட்டையாடும் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவனது தாய், சகோதரன், தந்தை என 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளான்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு