உலக செய்திகள்

ஈரானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் பலி

ஈரானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

டெஹ்ரான்,

ஈரான் நாட்டின் மஜாந்தரன் மாகாணத்தில் பேருந்து ஒன்றில் 50-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென பிரேக்கில் ஏற்பட்ட கோளாறால் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை