உலக செய்திகள்

உகாண்டாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் வெடித்து விபத்து: 19 பேர் பலி

உகாண்டாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டிரக் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர்.

கம்பாலா,

உகாண்டாவின் கயம்புரா வர்த்தக மையம் அருகே, குயின் எலிசெபத் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த வர்த்தக மையத்தை ஒட்டிய சாலையில் எரிபொருள் ஏற்றி வந்த டிரக் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களில் மோதியது.

மோதிய வேகத்தில், டிரக் பயங்கரமாக வெடித்தது. இந்த பயங்கர விபத்தில், 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சாலையோரம் இருந்த 25 சிறிய கடைகளும் தீயில் கருகின. படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்