டோக்கியோ
ஜப்பானின் தெற்கு தீவான ஒகினவா பகுதியில் ஹெனோகோ என்ற இடத்தில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. இதனருகே 2 படகுகள் சென்று கொண்டிருந்தன. அந்த படகுகளில் பயணித்த 18 பேர் கியோட்டோ பள்ளி மாணவர்கள் ஆவர்.
10 பேர் ஹெய்வா மரு படகு மற்றும் 8 பேர் சிறிய ரக புகுத்சு படகில் பயணித்தனர். அப்போது அந்த படகுகள் இரண்டும் திடீரென கவிழ்ந்தன. இந்த விபத்தில் 2 படகுகளில் இருந்த 21 பேரும் தூக்கி வீசப்பட்டு, நீருக்குள் விழுந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், இதில் ஒரு மாணவி மற்றும் படகு ஓட்டுநர் என 2 பேர் பலியாகி விட்டனர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் 17 வயது மாணவி மற்றும் புகுத்சு படகு ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுதவிர 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி ஜப்பான் கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.