உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாடான மொராக்காவில் பரிதாபம்; ஜவுளி ஆலையில் வெள்ளம் புகுந்து 24 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை வெளுத்துக்கட்டி வருகிறது.

தினத்தந்தி

இந்த நிலையில் அங்கு, டாங்கியர் நகரில் ஒரு வீட்டின் அடித்தளத்தில் (பாதாளத்தில்) சட்டவிரோதமாக ஒரு ஜவுளி தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. அந்த ஆலைக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் 20 முதல் 40-க்கு இடைப்பட்ட வயதினர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெள்ளம் வந்தபோது அங்கு எத்தனை தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள் என்பது தெரிய வரவில்லை. அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டாங்கியர் நகர வெள்ளத்தில் கார்கள் மூழ்கடிக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் அங்கு சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மொராக்கோ நகரங்களில் தடைகளாலும், மோசமான பராமரிப்பாலும் வடிகால்கள், வெள்ளத்தை மோசமாக்குவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்