உலக செய்திகள்

தைவானில் 2 நாட்களில் 2வது முறையாக கடுமையான நிலநடுக்கம்

தைவான் நாட்டில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

தைப்பே,

தைவான் நாட்டின் கிழக்கே தைதுங் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 24 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. தைவானில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை (நேற்று முன்தினம்) இரவு 11.11 மணியளவில் தைப்பே நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலநடுக்கம் தைப்பே நகரில் இருந்து தெற்கே 182 கி.மீ. தொலைவிலும், 30 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு