உலக செய்திகள்

சாலையில் தரையிறங்கியபோது விபத்து.. ஆட்டோ மீது விமானம் மோதி 4 பேர் பலி

சூடானில் ஆட்டோ மீது விமானம் மோதியதில் விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கர்த்தூம்:

ஆப்பிரிக்க நாடான சூடானில் விவசாயம் அதிகம் நடைபெறும் மாநிலம் கெடாரெப் மாநிலம். பெரும்பாலான பகுதிகளில் மழையை மட்டுமே நம்பி செய்யப்படும் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. பரந்து விரிந்த பகுதிகளில் மானாவாரி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்கு சிறிய ரக விமானங்களை பயன்படுத்துகின்றனர்.

அவ்வகையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறிய ரக விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. அந்த விமானம், விவசாய நிலப்பகுதியில் உள்ள சாலையில் தரையிறங்கியபோது, திடீரென எதிரே ஆட்டோ வந்தது. ரன்வேயில் வேகமாகச் சென்ற விமானம், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கடுமையாக சேதம் அடைந்தது. அதில் இருந்த விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் பலத்த காமடைந்தனர்.

விமானத்தின் இறக்கை மற்றும் புரொபெல்லர் சேதமடைந்தது. விமானத்தில் இருந்த 3 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை