உலக செய்திகள்

கசகஸ்தானில் ராணுவ விமானம் தரையிறங்கும்போது விபத்து - 4 பேர் உயிரிழப்பு

கசகஸ்தானில் ராணுவ விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

நூர்-சுல்தான்,

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கசகஸ்தானில் இன்று ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கசகஸ்தானின் தேசிய பாதுகாப்புப் படைக்கு சொந்தமான அந்த விமானம், அந்நாட்டின் தலைநகர் நூர்-சுல்தானில் இருந்து அல்மாதி நகரில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் விமானிகள் உள்பட மொத்தம் 6 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் அல்மாதி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன், விமானம் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை