உலக செய்திகள்

கொரோனா வைரஸ்; ஈரானில் ஒரே நாளில் 54 பேர் பலி

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் பலியாகி உள்ளனர்.

தெஹ்ரான்,

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து 104 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,136 ஆக உள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 28 ஆக உள்ளது. இதேபோன்று உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 549 ஆக உள்ளது. தொடர்ந்து பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்து இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. தெஹ்ரானில் 1,945 பேரும், குவாம் நகரில் 712 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரானில் கடந்த 7ந்தேதி ஒரே நாளில் 21 பேர் பலியாகினர். 1,076 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 145 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் கூறினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியானது அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.

வைரஸ் பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என ஈரான் நாட்டு அரசு சார்பில் கூறப்படுகிறது. எனினும், வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் நேற்று 43 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்வடைந்து இருந்தது. இந்நிலையில், வைரஸ் பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 54 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வடைந்து உள்ளது. பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,042 ஆக உயர்ந்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்