உலக செய்திகள்

உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி

உகாண்டா நாட்டில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தினத்தந்தி


* மெக்சிகோவின் வெராகுருஸ் மாகாணத்தில் லாரிக்குள் அடைத்து வைத்து கடத்தி வரப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 100 அகதிகளை போலீசார் மீட்டனர். அவர்கள் அனைவரும் கவுதமலா, எல் சல்வடார் மற்றும் கொலம்பியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்கு மழை, வெள்ளத்துக்கு இதுவரை 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், 8 ஆயிரத்து 400 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு எண்ணிக்கையை நடத்த இருப்பதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* உகாண்டா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள படேர் நகரில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* காங்கோ நாட்டை சேர்ந்த கிளர்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரான போஸ்கோ என்டகாண்டாவுக்கு போர் குற்றவழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு