மின்ஸ்க்,
பல மேற்கத்திய தலைவர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் ஆட்சிக்கு வரும்போது, மக்களின் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, குறுகிய காலத்திற்குள் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களை முடிந்தவரை ஈட்டிக்கொள்ளவே முயல்கிறார்கள், என்று பெலாரஸ் அதிபர் கூறினார்.
மேற்கத்திய அரசியல்வாதிகள் அனைவரும் நிலையற்ற நபர்கள் மற்றும் அவர்கள் வந்தார்கள், கொள்ளையடித்தார்கள், பிறகு சென்றுவிட்டார்கள், என்று மக்ரோன் மற்றும் மெர்ஸ் ஆகியோரை குறிப்பிட்டு அவர் கூறினார். அவர்கள் பிரான்ஸ் அல்லது ஜெர்மனி நாட்டு மக்களை பற்றி சிந்திப்பதே இல்லை.
ஒரு காலத்தில் அவர்கள் எங்களுக்கு அதாவது ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான், உக்ரைன் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்திற்கு பிந்தைய நாடுகளுக்கு பாடம் கற்பித்து வந்தார்கள். ஆனால் இப்போது அவர்களே எங்களை சந்தித்து பாடம் கற்றுக்கொண்டு, அதற்கேற்ற முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் முடிவுகளை எடுக்க அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள், என்று லுகாஷென்கோ வருத்தத்துடன் தெரிவித்தார்.
எந்தவொரு மேற்கத்திய அரசியல்வாதிக்கும் குறைந்தது 60 சதவீத மக்கள் ஆதரவு விகிதமாவது கிடைக்க வேண்டும் என்று கடவுள் அருளட்டும், என்றும் கூறினார்.