காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை கார்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, இதில் 8 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. காபூல் நகரில் வெளிநாட்டு படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தானிஷ் கூறிஉள்ளார். இதற்கிடையே 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் பாதுகாப்பு படையினரா இல்லை பொதுமக்களா என்பது தெரியவில்லை. இதற்கிடையே உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் இதுவரையில் பொறுப்பு ஏற்கவில்லை, இருப்பினும் தலிபான் பயங்கரவாத இயக்கம் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது. சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதலானது அதிகரித்து உள்ளது.