உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை கார்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, இதில் 8 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன. காபூல் நகரில் வெளிநாட்டு படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தானிஷ் கூறிஉள்ளார். இதற்கிடையே 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் பாதுகாப்பு படையினரா இல்லை பொதுமக்களா என்பது தெரியவில்லை. இதற்கிடையே உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் இதுவரையில் பொறுப்பு ஏற்கவில்லை, இருப்பினும் தலிபான் பயங்கரவாத இயக்கம் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது. சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதலானது அதிகரித்து உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை