உலக செய்திகள்

சிரியாவில் அரசு படை தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

சிரியாவில் நடந்த அரசு படை தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகி உள்ளனர். #SyriaWar

பெய்ரூட்,

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது.

சிரியாவில் உள்நாட்டு போர் சூழ்ந்த நிலையில் ஐ.எஸ். அமைப்பினர் போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் அரசு வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 8 குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். இதனை பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்