உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்: 19 தலீபான் பயங்கரவாதிகள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நங்கார்ஹர் மற்றும் லோகர் ஆகிய இரு மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இவற்றில் நங்கார்ஹரில் ஹிசாரக் மற்றும் ஷேர்ஜாத் ஆகிய மாவட்டங்களில் நேற்று மதியம் நடந்த தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். லோகர் மாகாணத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் நில கண்ணி வெடிகளையும், சாலையோர குண்டுகளையும் நிறுவும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் என ராணுவம் தெரிவித்து உள்ளது. இதனால் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் சேர்த்து மொத்தம் 19 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்