உலக செய்திகள்

அல்ஜீரியா: பொதுத் தேர்வுக்காக இண்டெர்நெட் சேவை துண்டிப்பு

அல்ஜீரியாவில் பொதுத் தேர்வுக்காக நாடு முழுவதும் இண்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. #Algeria

தினத்தந்தி

அல்ஜீரியா,

அல்ஜீரியாவில், உயர் நிலை பள்ளிகளுக்கான டிப்ளமோ தேர்வில் மாணவர்கள் இணையம் மூலம் முறைகேடுகள் செய்வதை தடுப்பதற்காக நாடு முழுவதும் இண்டெர்நெட் சேவை தடைசெய்யப்பட்டது.

2,000 மையங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் டிப்ளமோ தேர்வை எழுதினர். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க இணைய சேவை தடை செய்யப்பட்டது.

முன்னதாக 2016-ம் ஆண்டு நடந்த தேர்வில் அதிக மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டனர். தேர்வு தொடங்கும் முன்னரே, கேள்வித் தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதன் அடிப்படையில், டிப்ளோமா தேர்வில் முறைகேடுகள் நடைப்பெறாமல் தடுப்பதற்காக இரண்டு மணி நேர இணைய சேவையை துண்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், நாடு முழுவதும் இணைய சேவை தடை செய்வதாக அல்ஜீரிய டெலிகாம் நிறுவனம் அறிவித்திருந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து