உலக செய்திகள்

உலகைச்சுற்றி....

ஆப்கானிஸ்தானின் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது.

* சிங்கப்பூரில் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த கணேசன் சிங்காரவேல் (வயது 31) என்பவர், முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். பின்னர் அது வதந்தி என்பதும் குடிபோதையில் அவர் இப்படி செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் சிங்காரவேலுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.